மருத்துவமனையில் பிரியங்கா... அறுவைச் சிகிச்சை - நலம் விசாரித்த சோனியா, ராகுல்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு பித்தப் பை கல் நீக்க அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. அவரை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
41 வயதாகும் பிரியங்காவுக்கு வயிற்றில் வலி ஏற்படவே அவர் துடித்துள்ளார். இதையடுத்து அவரை கங்காராம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது பித்தபையில் கல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. நேற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.
அவரை தாயார் சோனியா காந்தியும், சகோதரர் ராகுல் காந்தியும் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, பிரியங்கா நலமாக உள்ளார் என்று மட்டும் கூறி விட்டுச் சென்றார்.