கர்நாடகத்தில் இன்று உள்ளாட்சித் தேர்தல்: வாக்குப்பதிவு துவங்கியது
பெங்களூர்: கர்நாடகாவில் இன்று காலை உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களில் பெங்களூரைத் தவிர்த்து 208 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இதில் 7 மாநகாட்சிகள், 43 நகராட்சிகள், 65 டவுன் முனிசிபல் கவுன்சில்கள், 93 டவுன் பஞ்சாயத்துக்களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்த தேர்தலில் 40 மில்லியன் மக்கள் வாக்களிக்கின்றனர்.
10,000 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு 46,000 அதிகாரிகள் வாக்குப்பதிவை மேற்பார்வையிடுகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகள் வரும் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
85 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 24 பதவிகளுக்கு யாரும் வேட்பு மனுவே தாக்கல் செய்யவில்லை. இந்த தேர்தல் மூலம் 4,867 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வரும் மே மாதம் கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கவிருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications