தாஜ் ஓட்டலை வேடிக்கைப் பார்த்த நேபாள நாட்டவர் கோடீஸ்வரர் ஆன கதை.
காட்மாண்டு: இந்த ஆண்டிற்கான போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில், முதன் முறையாக நேபாளத்தைச் சேர்ந்த பினோத் சவுதாரி இடம் பெற்றுள்ளார்.
நேபாளத்தில் நூடுல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் பினோத், நேபாளத்தின் மாருதி கார் நிறுவனத்தின் டீலராகவும் , தாஜ் ஓட்டல்களின் பங்குதாரர் ஆகவும் உள்ளார். இந்த நிறுவனத்தின் உற்பத்தி மையங்கள் இந்தியாவின் உத்தரகாண்ட், அசாம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ளது.
தனது வெற்றிக்கான சூத்திரத்தை பற்றி கூறுகையில்:
'எனது நூடுல்சை இந்தியா முழுவதும் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். எனது தொழிற்சாலைகளை கென்யா, சீனா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் தொடங்கும் திட்டம் உள்ளது.
16 வயதில் இந்தியாவுக்கு முதன் முதலில் சென்றேன். அப்போது மும்பையில் உள்ள தாஜ் அரண்மனை வாசலில் நின்று மலைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வந்தவர், நீ உள்ள போன, அடிப்பாங்கன்னு சொன்னார். இப்போதும் தாஜ் ஓட்டலில் தங்கும்போது அந்த இடத்தில சிறிது நேரம் நின்றுவிட்டுதான் வருவேன்' என்றார்.
இவரின் தாத்தா ராஜஸ்தானின் செகாவத் பகுதியிலிருந்து நேபாளத்திற்கு வேலை தேடி சென்றவர். இவரின் தந்தை காட்மாண்டுவில் 1968-ம் ஆண்டு முதன் முதலாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தியவர் என்பது குற்ப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications