6 வயது மாணவர்களுக்கு கழிவறையை சுத்தப்படுத்தும் தண்டனை: பள்ளி மீது பெற்றோர் புகார்
மும்பை: மும்பை பள்ளி ஒன்றில், 6 வயதுடைய மாணவர்களுக்கு தண்டனையாக கழிவறையை தூய்மைப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறி அளிக்கப்பட்ட மனுவைப் பெற்றுக் கொண்ட போலீஸார், பள்ளி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அடித்து திருத்தும் உரிமையை , ஆசிரியர்கள் மற்றும் போலீசுக்கு மட்டுமே மக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அதிலும் பல கட்டுப்பாடுகள் உண்டு. அதை முழுவதுமாக அறிந்திறாதவர்கள் பல கொடுரங்களை அவ்வப்போது அரங்கேற்றிவிடுவதும் உண்டு.
போலீஸ் கூட பெரும்பாலும் குற்றம் செய்த குற்றவாளிகளைத்தான் கண்டிக்கிறது. ஆனால், கல்வியறிவைப் பெறப் போகும் இடத்தில், சிறார்கள் கண்டிக்கப்படும் அவலங்கள் தான் அவ்வப்போது அரங்கேறுகின்றன.
மும்பை தாதர் பகுதியில் உள்ள ஆண்டோனியோ டிசில்வா பள்ளியில் பயிலும் 6 வயது மாணவர்கள் மூன்று பேர் வகுப்பில் சரியாக நடந்துகொள்ளவில்லை என்பதற்காக, மைதானத்தை சுற்றி வரும் தண்டனையையும், கழிப்பறையை தூய்மைப் படுத்தும் தண்டனையையும் ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர்.
இத்தண்டனையால் மனதளவில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவன், பித்துப் பிடித்த நிலையில் வீட்டில் இருந்துள்ளான். அவனிடம் பெற்றோர் தீவிரமாக விசாரித்ததில், பள்ளியில் நடந்ததைச் சொல்லியிருக்கிறான். வெகுண்டெழுந்த அவனது பெற்றோர், உடனடியாக பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு சரியான விளக்கத்தை பள்ளி நிர்வாகம் அளிக்காததாக கூறி, போலீஸில் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தாதர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications