Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு போலீஸ்காரர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய பிரதேசத்தில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்திய பிரதேச மாநிலம், சாகர் நகரில் உள்ள சான்பிலா போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் சுக்ராம் உபாத்யாயா. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணி தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த இவர் தனது துப்பாக்கியால் சப்-இன்ஸ்பெக்டரை சுட்டார். குண்டடிபட்ட சப்-இன்ஸ்பெக்டர் ரத்த வெள்ளத்தில் மயங்கி சாய்ந்தார்.

போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்த சுக்ராம் உபாத்யாயா, சுமார் 100 மீட்டர் தூரம் நடந்துச் சென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே பிணமானார்.

சப்-இன்ஸ்பெக்டர் அவாஸ்தி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+