காவிரி விவசாயிகளின் வறட்சி நிவாரணத்திற்காகு ரூ. 541 கோடி நிதி - ஓ.பன்னீர் செல்வம்
சென்னை: காவிரி பாசனப் பகுதி விவசாயிளின் வரட்சி நிவாரணத்திற்காக ரூ. 541 கோடி நிதியுதவி அனுமதிக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், 2012-2013-ம் ஆண்டுக்கான இறுதி துணை மதிப்பீடுகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
2012-2013-ம் ஆண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை சட்டப்பேரவையில் 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி தாக்கல் செய்த பின்னர், புதுப்பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு பேரவையின் ஒப்புதலை பெறுவதும், இந்த திட்டங்களுக்கான எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்ட தொகையை அந்த நிதிக்கு ஈடு செய்வதும்தான் துணை மானியக்கோரிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும்.
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தற்போதையை கடினமான நிதிநிலையை கருத்தில் கொண்டு அரசு ரூ.1,000 கோடியை முன்பணமாகவும், ரூ.909 கோடியை நீண்ட கால கடனாகவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
50 சதவீதத்திற்கு மேற்பட்ட பயிர் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள காவிரி பாசனப்பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணத்தொகுப்பாக ரூ.541 கோடி அனுமதித்து இருக்கிறது. முதியோர் ஓய்வூதியம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் ஏனைய சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.298 கோடி தேவைப்படுகிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications