ஒரிசாவில் ஷூ வாங்க பணம் தராத தாயை கல்லால் அடித்துக் கொன்ற மகன் கைது
புவனேஸ்வர்: ஒரிசா மாநிலத்தில் ஷூ வாங்க பணம் கொடுக்காத தாயைக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
ஒரிசா மாநிலம், சுந்தர்கர் மாவட்டம், ரூர்கெலாவில் உள்ள குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய்(24). அவருக்கு குடி பழக்கம் உள்ளது. அவர் மது அருந்த தனது தாய் சல்மி லாக்ராவிடம்(46) அடிக்கடி பணம் கேட்பார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஷூ வாங்க ரூ.200 பணம் கொடுக்குமாறு தனது தாயிடம் சஞ்சய் கேட்டுள்ளார்.
ஆனால் சல்மி பணம் தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் ஒரு கல்லை எடுத்து தனது தாயை அடித்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து சஞ்சய்யின் தந்தை உதித் நகர் காவல் நிலையத்தில் மறுநாள் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சஞ்சய்யை கைது செய்தனர்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது ஜாமீன் மனு தள்ளுபடியானதையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications