செல்போனில் அப்படி யாரிடம் பேசுகிறாய்? டெல்லியில் காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது
டெல்லி: டெல்லியில் செல்போனில் பேசியது யார் என்பதை கூற மறுத்த காதலியை கத்தியால் குத்திய காதலன் கைது செய்யப்பட்டார்.
டெல்லியில் உள்ள நஜாஃபர்கர் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் 19 வயது வாலிபனை காதலித்து வருகிறார். அவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு தெற்கு டெல்லியில் உள்ள துவாரகா பூங்காவில் சந்தித்தனர். அப்போது சில காரணங்களால் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து பேசினர். பின்னர் அவர்கள் பைக்கில் வீட்டுக்கு கிளம்பினர்.
வீட்டுக்கு செல்லும் வழியில் அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் யாருடனோ செல்போனில் பேசினார். செல்போனில் யாருடன் பேசுகிறாய் என்று காதலன் கேட்டதற்கு அந்த பெண் பதில் கூறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காதலன் கத்தியால் காதலியின் முகம் மற்றும் கழுத்தில் 2 முதல் 3 முறை குத்திவிட்டு பைக்கில் அங்கிருந்து தப்பிவிட்டார்.
அந்த பெண்ணை அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பெண்ணை சிகிச்சைக்காக தெற்கு டெல்லியில் உள்ள ராவ் துலா ராம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கத்தியால் குத்திய நபரை நேற்று மாலையே கைது செய்தனர். தங்களுடைய நண்பர் ஒருவருடன் தான் அந்த பெண் செல்போனில் பேசியதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த வாலிபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications