பெண்கள் அழைக்காமல் ஆண்கள் பலாத்காரம் செய்வதில்லை... ம.பி காங்கிரஸ் தலைவர் திமிர் பேச்சு
போபால்: ஆண்களை பலாத்காரம் செய்யத் தூண்டுவதே பெண்கள்தான் என்றும், அவர்கள் கண்ஜாடை செய்வதால்தான் பாலியல் குற்றங்கள் நடைபெறுகின்றன என்று முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சத்தியதேவ் கடாரா கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சத்யதேவ் கடாரா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பெண்கள், ஆண்களைப் பார்த்து கண் ஜாடை செய்வதாலேயே, ஆண்கள் பலாத்காரம் செய்ய தூண்டப்படுகிறார்கள். எனவே பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முழு காரணமும் பெண்கள்தான் என்று கூறியுள்ளார்.
அமைச்சரின் பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
5 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகள் பல கயவர்களால் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். அவர்கள் ஜாடை காட்டினார்களா? வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தைகளும், விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகளும் காமூகர்களால் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், பல மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இது போன்று பேசிய காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
காங்கிரஸ் தலைவரின் இந்த திமிர் பேச்சுக்கு பாஜக தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications