25ம் தேதி பகுதி நேர பி.இ. கவுன்சிலிங் துவக்கம்
சென்னை: பகுதி நேர பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 25ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.
தொழில் நுட்பக் கல்வி இயக்க கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2013-14ம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும்.
விண்ணப்பித்துள்ள தகுதியான மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.
கடிதம் கிடைக்கப்பெறவில்லை எனினும் தகுதியுள்ள மாணவர்களும் மேற்கூறிய தேதிகளில் அசல் சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
அதன் விவரம் பின் வருமாறு,
மே 25ம் தேதி டெக்ஸ்டைல் டெக்னாலஜி (ஜவுளித்துறை) மற்றும் சிவில் என்ஜினியரிங்
மே 26ம் தேதி மெக்கானிக்கல் என்ஜினியரிங்
மே 27ம் தேதி எலக்டிரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ கணிணி (இஇஇ/ இசிஇ/ சிஎஸ்இ)
இது குறித்து மேலும் விபரம் அறிய www.tn-dte-ptbe.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.












Click it and Unblock the Notifications