இப்படியும் ஒரு 'பிரா'ப்ளம்.... !
லண்டன்: பிரபல பெண்கள் உள்ளாடை வடிவமைப்பாளரான மிஷல் மோன் இரு பெரும் நம்பி்க்கை துரோகத்திற்குள்ளாக்கி பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார். முதலில் அவரது கணவர் அவரை விட்டுப் பிரிந்து விவாகரத்து செய்தார். பின்னர் அதே வேகத்தில், மிஷலின் அலுவலகத்தில் சீனியர் ஊழியராகப் பணியாற்றி வந்த சமந்தா பன் என்பவரை அதிரடியாக மணந்து அவரை வைத்து புதிய உள்ளாடை நிறுவனத்தைத் திறந்து மிஷலுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளாராம்.
பிரபலமான பெண்கள் உள்ளாடை வடிவமைப்பாளர்தான் மிஷல் மோன். அதிலும் பிரபலமான பிரா டிசைனர்.
இவரது வடிவமைப்பில் வெளியான பிராக்களுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

முதலில் விவாகரத்து
இவரது கணவர் பெயர் மைக்கேல் மோன். இவருக்கும், மிஷலுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து விவாகரத்து செய்தார் மைக்கேல்.

2வது போட்டி பிரா நிறுவனம்
அதன் பின்னர் மிஷலின் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தவரும், மிஷலின் நெருங்கிய தோழியுமான சமந்தா பன் என்பவரை கவர்ந்திழுத்து அவரை வெளியே கொண்டு திருமணமும் செய்து இப்போது போட்டி நிறுவனம் ஒன்றையும் சமந்தாவுடன் சேர்ந்து தொடங்கி விட்டார்.

அதிர்ச்சியில் மிஷல்
மைக்கேல் தொடங்கியுள்ள இந்த புதிய உள்ளாடை நிறுவனத்தின் தலைமை உள்ளாடை வடிவமைப்பாளர் சமந்தாதான். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் மிஷல்.

தானே மாடல்
மிஷல் தனது உள்ளாடைகளுக்குத் தானே மாடலாகவும் இருந்து போஸ் கொடுத்து அசத்தியவர் ஆவார். 2010ம் ஆண்டு தனது உள்ளாடைகளுடன் அவர் கொடுத்த போஸ்கள் பெரும் பிரபலமாகின.

சொத்துக்கள் போச்சு
விவாகரத்து விவகாரத்தால் தனது சொத்துக்களை கிட்டத்தட்ட இழந்து விட்டார் மிஷல். தற்போது கிளாஸ்கோவில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் அவர் தங்கியுள்ளார்.

பறிபோகாத நம்பிக்கை
இத்தனையையும் இழந்தபோதிலும், நம்பிக்கைத் துரோகங்களை சந்தித்தபோதிலும் உடைந்து போய் விடவில்லை மிஷல். மாறாக, தனது நிறுவனத்தை சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் தன் பக்கமே தக்க வைத்துக் கொண்டுள்ளார். மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்காலம் குறித்துப் பேசுகிறார்.

நன்றி சொல்வேன்
சமந்தா குறித்து அவர் கூறுகையில், சமந்தா என் முன்பு இப்போது வந்து நின்றால் நான் தேங்க்யூ என்று ஒரு வார்த்தை மட்டுமே சொல்வேன். எனக்கு அவர் நல்லதுதான் செய்துள்ளார்.முன்பை விட இப்போது நான் பெரும் உற்சாகத்துடன் செயல்பட முடிகிறது என்கிறார் புன்னகையுடன்.
நம்பிக்கைத் துரோகங்கள் சில நேரம் வருத்தம், வலியைக் கொடுத்தாலும்... புதிய உத்வேகத்தையும் நமக்கு அளிக்கத் தவறுவதில்லை.












Click it and Unblock the Notifications