அமெரிக்கா போல் இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்'கில் இணைய தடை!
டெல்லி: அமெரிக்க நாடுகளைப் போல் இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்' கணக்கு தொடங்குவதை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மெஜாரட்டி சட்டம், இந்திய ஒப்பந்த சட்டம், தகவல் மற்றும் தொழில் நுட்ப சட்டப்படி, 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் பேஸ் புக் போன்ற தளங்களில் கணக்கு தொடங்குவது விதி மீறல் ஆகும்.
எனவே பேஸ் புக் போன்ற சமூக தளங்களில் 18 வயதுக்குட்பட்டவர்கள் கணக்கு தொடங்குவதை தடை செய்ய வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாச்சாரியா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.அஹமத் நேற்று பிறப்பித்த உத்தரவில்...

பிள்ளைகளை காப்பாற்ற...
'நமது பிள்ளைகளை நாம் காப்பாற்ற வேண்டும். சட்டபுறம்பான 'ஆன் லைன்' செயல்பாடுகளில் பெரியவர்கள், அப்பாவி சிறுவர்கள் ஈர்த்து வருகின்றனர்.

13 தான் குறைந்த பட்ச வயது...
அமெரிக்கா போன்ற நாடுகளில் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 13 என குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை செய்ய வேண்டும்...
சமூக நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் 13 வயதுக்குட்பட்டவர்கள் இதுபோன்ற தளங்களில் கணக்கு தொடங்குவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications