இந்தியாவின் பிரபலமான சில பேச்சிலர்கள்….
சினிமா, விளையாட்டு, அரசியல் ஆகிய மூன்று துறைகளில் இருக்கும் ஆணோ, பெண்ணோ பிரபலமானவர்களாத்தான் இருப்பார்கள். அவர்களின் குடும்பத்தினரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஆர்வம் காட்டுவார்கள்.
இந்தியாவில் இரண்டு, மூன்று திருமணங்கள் செய்து கொள்வது சகஜமாக இருக்கும் இந்த கால கட்டத்தில் திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் பேச்சிலராக இருக்கும் பிரபலங்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
சினிமா, அரசியல், தொழில்துறை போன்ற துறைகளில் வெற்றி பெற்று மக்களிடையே பிரபலமான பேச்சிலர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

காமராஜர்
கறுப்பு காந்தி என்று புகழப்பட்ட காமராஜர் திருமணம் செய்து கொண்டால் அரசியல் வாழ்க்கை பாதிக்கும் என்று கூறி கடைசி வரைக்கும் பேச்சிலாராகவே இருந்து மக்களுக்காக வாழ்ந்தார்.

அடல் பிகாரி வாஜ்பாய்
பாஜகவின் மூத்த தலைவர் வாஜ்பாய். இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். தற்போது 88 வயதாகும் இந்த தலைவருக்கு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எழுந்ததில்லையாம்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்
விஞ்ஞானியாக இருந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம். திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால்தான் தன்னால் இந்த அளவிற்கு சாதிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ரத்தன் டாடா
தொழில் துறையில் பிரபலமடைந்த ரத்தன் டாடாவிற்கு இப்போது 75 வயதாகிறது. ஆனாலும் அவர் பேச்சிலராகத்தான் இருக்கிறார். பயம் காரணமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ஒருமுறை பேட்டியில் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் இளைய தலைவர் ராகுல் காந்தி. நாளைய பிரதமர் என்று கட்சியினர் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் திருமணத்தைப் பற்றி பேச்சு கூட எடுப்பதில்லை.

சல்மான் கான்
பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டார். பல நாயகிகளுடன் கிசு கிசு எழுந்தாலும் 47 வயதாகிவிட்டது இன்னமும் பேச்சிலர்தான். எப்படியோ திருமண வாழ்க்கையில் இருந்து தப்பிவிட்டேன். ஆனால் குழந்தைகள் என்றால் மிகவும் விருப்பம் என்று ரசிகர்களிடம் கூறியுள்ளார் சல்மான் கான்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications