'கொஞ்சமாவது நேர்மை இருந்தால் பதவி விலகட்டும்!' - சீனிவாசனுக்கு நெருக்கடி தரும் சரத் பவார்!

Subscribe to Oneindia Tamil

Sharad Pawar condemned Srinivasan and urged to resign ASAP
மும்பை: பிசிசிஐ தலைவர் சீனிவாசனுக்கு கொஞ்சமாவது நேர்மை இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும் என சரத் பவார் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்டம், அதற்கு கிரிக்கெட்டின் தலைமையே உடந்தையாக இருந்தது போன்றவை கிரிக்கெட் உலகை உலுக்கியுள்ளன.

கிரிக்கெட் வாரிய தலைவர் சீனிவாசனின் மருமகனே சூதாட்டத்தின் முக்கியப் புள்ளியாக இருந்தது அம்பலமாகியுள்ளது.

தார்மீக அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் என் சீனிவாசன் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன.

இதற்கு வலு சேர்ப்பது போல மத்திய விளையாட்டுத் துறையும், இந்த விஷயத்தில் என் சீனிவாசன் தார்மீக அடிப்படையில் சிந்தித்து முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டது.

இன்னொரு பக்கம், பிசிசிஐயின் முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார், சீனிவாசனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

சீனிவாசன் மற்றும் குருநாத் மெய்யப்பனின் நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை என்று அவர் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இன்று அவரது தேசியவாத காங்கிரஸ் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், "கிரிக்கெட் அதன் பெருமையை இழந்துவிட்டது. இது மிகப்பெரிய அவமானம். சீனிவாசனுக்கு கொஞ்சமாவது மனசாட்சி, நேர்மை இருந்தால் உடனடியாக பதவி விலக வேண்டும்," என்று தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சீனிவாசனின் பதவி கலகலத்துவிட்டது தெளிவாகிவிட்டது.

சஹாரா விலகல்..

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சரான சஹாரா பரிவார், 'சீனிவாசன் பதவியில் இருக்கும் வரை தங்களால் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்ய முடியாது' என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+