அமெரிக்க நீதிபதியாக சண்டிகர் சீனிவாசன் நியமனம் - அதிபர் ஒபாமா பாராட்டு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட சர்கியூட் நீதிமன்ற நீதிபதியாக இந்தியரான ஸ்ரீகாந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் சீனிவாசன் சண்டிகாரில் பிறந்தவர். 46 வயதாகும் அவரை கொலம்பியா மாவட்ட சர்கியூட் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமா நியமித்தார். இதற்கு நீதித்துறை செனட்சபை கமிட்டி விவாதித்து 97-0 என்ற வாக்கெடுப்பில் எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் மிகப் பெரிய நீதிமன்றங்களில் ஒன்றில் இந்தியருக்கு கிடைத்த பெருமை இது. இந்த நீதிபதி பதவிக்கு தேர்வு பெற்ற தெற்கு ஆசியாவைச் சேர்ந்த முதலாவது நபரும் ஸ்ரீகாந்த் சீனிவாசன்தான்.

ஸ்ரீகாந்த் சீனிவாசனின் நியமனத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா பாராட்டும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் பிரின்சிபல் உதவி சொலிசிடர் ஜெனரல் உள்பட பல பொறுப்புகளில் 20 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர். அமெரிக்க நாட்டு வரலாற்றில் தெற்கு ஆசியாவை சேர்ந்தவர்களில் சீனிவாசனே முதல் முறையாக நீதிபதியாகும் பெருமையை பெற்றுள்ளார். பண்பாளரான அவர் அமெரிக்காவின் தனிச்சிறப்பை பாதுகாக்க உழைப்பார். நீதித்துறையில் அவர் தனி முத்திரை பதிப்பார் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+