பார்வை குறைபாட்டுடன் படித்து மாநிலத்தில் முதலாவதாக வந்த ஈரோடு மாணவி பொன்சிவசங்கரி
ஈரோடு: பார்வை குறைபாடு இருந்தும் அதையும் தாண்டி பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஈரோடு மாணவி பொன்சிவசங்கரிக்கு கண் மருத்துவராக ஆசை.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 9 மாணவிகள் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர். அவர்கள் அனைவருமே 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த பொன்சிவசங்கரியும் அதில் ஒருவர்.
சிவசங்கரியின் தந்தை கதிர்வேல், தாய் ராஜோஸ்வரி. அவர்கள் ஈரோடு மாவட்டம் அரசலூர் அருகே வடுகப்பட்டி பொன்தாலிவலசைச் சேர்ந்தவர்கள். 8ம் வகுப்பு வரை கிராமத்தில் படித்த சிவசங்கரி 9ம் வகுப்பு முதல் ஈரோடு இந்துக் கல்வி நிலையத்தில் தங்கி படித்து வருகிறார். முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக அவர் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லவில்லை.
அவருக்கு கண்ணில் லேசான குறைபாடு இருந்துள்ளது. அதனால் கண் மருத்துவராகி பிறரின் பார்வை குறைபாடுகளை போக்க அவர் ஆசைப்படுகிறார்.












Click it and Unblock the Notifications