லண்டனில் குடியிருக்க வீடில்லை...: இளவரசர் ஹாரிக்கு வந்த கொலை மிரட்டல்
Subscribe to Oneindia Tamil

ராஜ தம்பதிகளான சார்லஸ் - டயானாவின் இளைய மகன் ஹாரி (28). தற்போது இங்கிலாந்து ராணுவத்தில் விமான படையில் பணிபுரிந்து வரும் இவருக்கு சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் வந்துள்ளது.
கொலை மிரட்டல் விடுத்த நபரின் பெயர் அஷ்ரப் இஸ்லாம் (30). லண்டனில் தான் தங்குவதற்கு வீடு இல்லை என்ற ஆத்திரத்தில் அஷ்ரப் இவ்வாறு கூறியுள்ளார். எனினும் பகிரங்கமாக ஹரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக அஷ்ரப்பை போலீசார் கைது செய்தனர்.
அஸ்பிரிட்ஷ் கோர்ட்டில் அஹ்ரப் மீது வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடை பெற்று வருகிறது. கொலை மிரட்டல் விடுக்கப் பட்ட குற்றத்திற்காக அஷ்ரப்பிற்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications