மூட்டு வலிக்கு மருந்தாகும் ‘ஓம்’ யோகா
சென்னை: ஓம் என்பது மந்திரச் சொல் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லும்போது மூட்டு வலி பறந்து போய் விடுகிறதாம்.
இந்த ஓம் யோகா பயிற்சியை சென்னையில் உள்ள அரசு யோகாசனம் மற்றும் நேச்சுரோபதி கல்லூரியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். அங்கு மூட்டு வலி பிரச்சினைக்காக வருவோருக்கு யோகா சொல்லித் தருகிறார்கள். மேலும் குறிப்பாக ஓம் பாராயணத்தையும் சொல்லித் தருகிறார்கள்.
இந்த ஓம் மந்திரத்தை தினசரி 30 முறை சொல்லி வருகிறாராம் அப்துல் காதர் என்ற வியாபாரி. 50 வயதான இவருக்கு மூட்டுவலி பிரச்சினை இருக்கிறது. இதிலிருந்து மீள இந்த ஓம் பாராயணம் காதருக்கு உதவியுள்ளதாம்.

தொழுகை மாதிரியே யோகாவும்...
இதுகுறித்து அவர் கூறுகையில், தினசரி நான் தொழுகையில் ஈடுபடுவதால் எனக்கு மூட்டு வலி பிரச்சினைஉள்ளது. ஆனால் தற்போது இந்த ஓம் பாராயண யோகா பயிற்சியால் எனக்கு மூட்டு வலி வெகுவாக குறைந்து நிவாரணம் ஏற்பட்டுள்ளது. என்னால் எளிதாக முட்டி போட்டு தொழுகையில் ஈடுபட முடிகிறது என்கிறார்.

மருத்துவ பயன்கள்...
இதுகுறித்து கல்லூரி உதவிப் பேராசிரியை டாக்டர் கனிமொழி கூறுகையில், ஓம் என்பது மந்திரம் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட. குறிப்பாக மூட்டு வலிக்கு இது உகந்த நிவாரணம் தருகிறது. புற்று நோயாளிகளுக்கும் கூட இது நிவாரணம் தருகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பதட்டத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் மட்டுப்படுகின்றன. வலி நிவாரணியாக இந்த மந்திரம் பயன்படுகிறது. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நல்ல மருத்துவ பயன்கள் ஏற்படுவது அறிவியல்பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஜாதி, மத பேதமின்றி...
யோகாசனத்தோடு இந்த ஓம் உச்சரிப்பையும் இங்கு சொல்லித் தருகிறார்கள். இதை மத பாகுபாடின்றி அனைவரும் பின்பற்றுகின்றனர் என்பது ஆச்சரியமானது.

உச்சரிப்பு பலன்...
வலி, தூக்கமின்மை வியாதி, பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த ஓம் மந்திர உச்சரிப்பு நல்ல பலனைத் தருமாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications