அம்மா கேண்டீன்: இட்லியைச் 'சாப்பிட்ட' பொங்கல்!
சென்னை: அம்மா உணவகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய உணவு வகைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 33,398 பொங்கல் விற்பனை விற்பனையாகியுள்ளதாம்.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் தொடங்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் ஆரம்பத்தில் இட்லி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் ஆகியவை விற்கப்பட்டு வந்தன. தற்போது, கூடுதலாக பொங்கல், கறிவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம் ஆகியவை முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிமுகப் படுத்தப்பட்டது.
காலையில் இட்லியுடன் கூடுதலாக பொங்கலும், மதியத்தில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கூடுதலாக கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதமும் விற்கப்படுகிறது.

அசத்தும் பொங்கல்...
அதிலும் குறிப்பாக பொங்கல் விற்பனை அமோகமாம். ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை காலை வரை 200 அம்மா உணவகங்களில் மொத்தம் 33,398 பொங்கல் விற்பனை செய்யப்பட்டுள்ளனவாம்.

வெரைட்டி ரைஸ்...
மதிய வேளையில் 18,146 கறிவேப்பிலை சாதமும், 20,542 எலுமிச்சை சாதமும் விற்பனையாகி உள்ளன. இன்று முதல் மதிய வேளைகளில் சாம்பார் மற்றும் தயிர் சாதங்களுடன் கறிவேப்பிலை அல்லது எலுமிச்சை சாதம் வழங்கப்பட இருக்கிறது. நேற்று மட்டும் இரண்டு சாதங்களுமே வழங்கப்பட்டன.

டேஸ்ட் மாறும் மக்கள்...
புதிய சாத வகைகள் மற்றும் பொங்கலின் வருகையால் இட்லி, சாம்பார், தயிர் சாதங்களின் விற்பனை கொஞ்சம் சரிந்துள்ளதாம்.

டாப்பில் இருந்த இட்லி...
வழக்கமாக விற்பனையாகும் 3.30 லட்சம் இட்லியும், 30,000 தயிர் சாதமும், 60,000 சாம்பார் சாதமும் தற்போது முறையே சுமார் 2.50 லட்சம், 35,000, 28,000 எனக் குறைந்துள்ளதாம்.

பொதுமக்கள் மகிழ்ச்சி...
ஆரம்பம் தொட்டே, மெனுவை அதிகப் படுத்த கோரிக்கை விடுத்து வந்த பொதுமக்களுக்கு தற்போது மகிழ்ச்சி அதிகரித்துள்ளது என்பது க்யூவில் நிற்கும் மக்களைப் பார்க்கும் போதே தெரிகிறது.












Click it and Unblock the Notifications