தமிழ்நாட்டில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. பதவிகளுக்கு 27ம் தேதி தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பிக்களாக உள்ள ஞானதேசிகன் (காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), திருச்சி சிவா (தி.மு.க.), இளவரசன் (அ.தி.மு.க.), மைத்ரேயன் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூ,) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இதையொட்டி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. மனுத் தாக்கல் செய்ய 17ம் தேதி கடைசி நாள். 18ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை திரும்பப் பெற 20ம் தேதி கடைசி நாளாகும்
27ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். மாலை 5 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications