ராணுவ ரகசிய கடிதம் மாயம்: 6 அதிகாரிகள் சிக்குகிறார்கள்
டெல்லி: ராணுவ கடிதம் ஒன்று மாயமாகியுள்ளதால் இந்திய-சீன எல்லையில் உள்ள செயல்பாடுகள் மற்றும் ராணுவத்தின் ரகசிய செயல்பாடுகள் குறித்த தகவல்கள் கசிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக 6 அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேஸ்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 4வது ராணுவ படைப்பிரிவில் இருந்து ராங்கியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 21வது மலை பிரிவு ராணுவ அதிகாரிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய-சீன எல்லை விவகாரம், ராணுவ ரகசியங்கள் குறித்து கடிதம் அனுப்பப்பட்டது.
அந்த கடிதம் கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்திற்குள் மாயமானது. அந்த கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ராணுவ ரகசியங்கள் அடங்கிய கடிதம் மாயமானது தொடர்பாக 6 வீரர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீது ராணுவ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கடிதம் மாயமானபோது வி.கே. சிங் ராணுவ தளபதியாக இருந்தார். கடிதம் கிடைக்கப்பெற்ற 21வது மலைப் பிரிவை அப்போது நிர்வகித்த மேஜர் ஜெனரல் என்.எஸ். கெய் தற்போது பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பதின்டாவை தலைமையிடமாகக் கொண்ட 10வது பிரிவை நிர்வகித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications