மழை வெள்ளத்தில் சிக்கிய இமாச்சல் முதல்வர்: 60 மணிநேர போராட்டத்திற்குப் பின் மீட்பு
கின்னாவூர்: மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஹிமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திர சிங் சமார் 60 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார்.
வட மாநிலங்களில் தொடரும் கன மழையால் பஞ்சாப், அரியானா குஜராத் போன்ற மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தர்கண்ட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 60க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பலியாகினர். இந்நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்திர சிங் மற்றும் அவரது அலுவல அதிகாரிகள் காரில் கின்னாவூருக்கு சென்றனர்.
அந்த நேரத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வீரபத்திரசிங் சிக்கிக் கொண்டார். அவரால் வெளியேற முடியவில்லை. இதனையடுத்து முதல்வரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தொடர்ந்து. சுமார் 60 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் வீரபத்திர சிங் மீட்கப்பட்டார். அவருடன் சிக்கிக் கொண்ட அவரது அலுவல அதிகாரிகளும் மீட்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications