ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழி போட்டியிட தடை இல்லை: தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்
Subscribe to Oneindia Tamil

இந்தியத் தேர்தல்களில் குற்றப் பின்னணி உடையவர்கள் போட்டிsயிட தடை விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரை. இப் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்படவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் கனிமொழி மீது குற்றச்சாட்டு உள்ளது. அவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னைக்கு நேற்று வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்திடம் இதுபற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, குற்றப் பின்னணி உடையவர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைதான் செய்துள்ளது. சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் பழைய சட்டப்படி தேர்தல் நடப்பதால் கனிமொழி போட்டியிட தடை இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications