மார்பெலும்பை உடைத்து... 5 வயது தங்கையைக் கொன்ற ‘பாசக்கார’ அண்ணன்
நியூயார்க்: டபிள்யூ.டபிள்யூ. எப்' பார்த்திருக்கிறீகளா? பார்ப்பவர்கள் வயிற்றிலே புளியைக் கரைக்கும் அளவிற்கு பயங்கரமாக அடித்துக் கொள்வார்கள். அமெரிக்காவிலும், அதே பாணியில், 13 வயது சிறுவன் ஒருவன் ,விவரமறியாத தனது 5 வயது தங்கையை கைகளால் குத்தியே கொன்றுள்ளான்.
கார்ட்டூன் முதற்கொண்டு சண்டையிடும் காட்சிகள் தான் ஊடகங்கள் வழியாக குழந்தைகளைச் சென்று சேர்கின்றன. அப்படித்தான், .அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியில் வாழும் 13 வயது சிறுவன் ஒருவனும் மல்யுத்தப் போட்டிகளின் ரசிகனாம்.
சம்பவத்தன்று, டிவியில் மல்யுத்தம் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு நிஜத்திலும் அதே போன்று சண்டை போட ஆசை வந்துள்ளது. அப்போது அவனருகில், அவனுக்கு தங்கை உறவு முறை உள்ள 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள். தடாலடியாக அவள் மீது பாய்ந்த சிறுவன், அச்சிறுமியை கட்டிலில் தள்ளி, டி.வி.யில் காட்டப்படுவதைப் போலவே அந்த சிறுமியின் வயிற்றில் சரமாரியாக குத்துகளை விட்டுள்ளான்.
சிறுமி மீது அமர்ந்துக்கொண்டு தனது முழங்கையால் மார்பு, தொண்டை ஆகியவற்றின் மீது மாறி, மாறி தாக்கியுள்ளான். வலி பொறுக்காமல் அச்சிறுமி கதறியதை கேட்டு, ஓடிவந்த அவளின் தாயார் அச்சிறுமியை ஆஸ்பத்திரிகு தூக்கிக் கொண்டு ஓடினார். ஆனால், பரிதாபம் அவளைக் காப்பாற்ற இயலவில்லையாம்.
பிரேத பரிசோதனையில் சிறுமியின் மார்பு எலும்பு முறிந்து, ஈரலில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அச்சிறுவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளானாம்.
நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட டபிள்யூ.டபிள்யூ. ஈ நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம், தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு, இந்த படுகொலைக்கு தங்களது நிகழ்ச்சிகளை காரணமாக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுக்குத் தாங்க குழந்தைகளை வன்முறைக் காட்சிகளை பாக்க விடக்கூடாதுனு சொல்றது...












Click it and Unblock the Notifications