பெருங்குடியில் தலையில் டி.வி. விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி
சென்னை: பெருங்குடியில் டி.வி. ஸ்டாண்டு சரிந்ததில் டி.வி. விழுந்து 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் பெருங்குடி வேம்புலி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பெயிண்டர் கமலதாஸ். அவரது மனைவி ஸ்ரீதேவி. அவர்களின் குழந்தை சஞ்சனா(2). நேற்று இரவு ஸ்ரீதேவி பாத்திரம் தேய்க்க, கமலதாஸ் வீட்டுக்கு வெளியே நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார்.
குழந்தை சஞ்சனா மட்டும் உட்கார்ந்து டி.வி.யில் கார்டூன் படம் பார்த்துள்ளது. அப்போது குழந்தை திடீர் என்று டி.வி.யை பிடித்து இழுத்துள்ளது. அப்போது டி.வி. ஸ்டாண்டு சாய்ந்து குழந்தையின் தலையில் டி.வி. விழுந்து உடைந்தது. ஏதோ உடையும் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தபோது குழந்தை மயங்கிக் கிடந்தது.
உடனே குழந்தையை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தை சஞ்சனா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தாள்.












Click it and Unblock the Notifications