ஓசூரில் 11வயது சிறுமியை கற்பழித்த 60 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
ஓசூர்: 11 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில், குற்றவாளியான 60 வயது காமக்கொடூரனுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது ஓசூர் நீதிமன்றம்.
ஓசூர் பேடரப்பள்ளி இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். 2009ம் வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியைக் கற்பழித்த குற்றத்திற்காக, சிப்காட் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை ஓசூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் கோவிந்தராஜ் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியானதால், வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜூக்கு சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கற்பழித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மேலும், இந்த தண்டனைகளை கோவிந்தராஜ் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications