அவதூறு வழக்கு: விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த சென்னை நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய விஜயகாந்த், முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காக அரசுப் பணத்தை விரயம் செய்வதாக குற்றஞ்சாட்டிருந்தார்.
அவரின் இந்த பேச்சு ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி, மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல். ஜெகன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இன்று நேரில் ஆஜராக விஜயகாந்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை. மேலும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கும் பெறவில்லை.
ஜூலை 29 ந் தேதிக்குள் ஆஜராக உத்தரவிட்டுள்ள முதன்மை அமர்வு நீதிபதி சொக்கலிங்கம், அன்றைய தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications