4வது நாளாக தொடரும் என்.எல்.சி. நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம்! மின் உற்பத்தி பாதிப்பு!
நெய்வேலி: என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 4வது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி குறையத் தொடங்கியுள்ளது.
என்.எல்.சி.யின் 5% பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களும் 3-ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொ.மு.ச., அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கம் மற்றும் 15 தொழிற் சங்கங்களை சேர்ந்த சுமார் 23 ஆயிரம் தொழிலாளர்கள் இதில் பங்கேற்று வருகிறார்கள். பட்டதாரி பொறியாளர்கள், தேசிய பட்டதாரிகள், அலுவலக அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகிய 4 சங்கங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500 பேர் மட்டும் பணிக்கு சென்று வருகிறார்கள்.
இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. தற்போது என்.எல்.சி.யின் 3 சுரங்கப்பகுதியிலும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முடங்கி விட்டது. போராட்டம் காரணமாக மின்சார உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.












Click it and Unblock the Notifications