இளவரசன் தற்கொலை: எஸ்.பி. அஸ்ரா கார்க் அறிவிப்பு… கடிதத்தை திருடிய 4 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தர்மபுரி இளவரசன் தற்கொலை செய்து கொண்டது அவர் எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் தெளிவாகியுள்ளது என்று தர்மபுரி மாவட்ட எஸ்.பி அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

இளவரசன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பலரும் நம்பி வரும் நிலையில், மாவட்ட எஸ்.பியின் இந்த திடீர் தகவல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இளவரசனின் கடிதத்தை திருடியது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருடியவர்கள் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

Ilavarasan

இதுகுறித்து எஸ்.பி அஸ்ரா கார்க் கூறுகையில், இளவரசன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் இளவரசன் கூறியுள்ளார் என்றார். இளவரசன் இறப்பதற்கு முன்பாக அவர் பையில் வைத்திருந்த கடித்தத்தை மர்ம நபர்கள் சிலர் திருடியுள்ளனர். அது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கைப்பற்றப்பட்டுள்ள கடிதம் இளவரசனின் கையெழுத்துதானா என்பதை அறிந்து கொள்ள ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+