ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த 30 ஆண்கள் கைது: ரூ 500 அபராதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரயிலில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்த 30 ஆண்கள் ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நபர் ஒன்றுக்கு ரூ 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெண்கள் பிரத்யேகமாக பயணம் புரிவதற்கென்று தொலை தூர மற்றும் சென்னை ரயில்களிலும் சில பெட்டிகள் தனியாக உள்ளன. ஆனால், அதில் முறைகேடாக ஏறும் சில ஆண் பயணிகளால் அதில் பயணம் செய்யம் பெண் பயணிகள் பல நேரங்களில் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
இதனைத் தடுக்க அவ்வப்போது ரயில்வே போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி அபராதம் விதிக்கிறார்கள். நேற்றும் அதுபோல் ரயில்வே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பெண்கள் பெட்டியில் விதி முறைகளை மீறி பயணம் செய்த 30 ஆண் பயணிகள் பிடிபட்டனர்.
அவர்களிடம் ரயில்வே சட்டம் 162 வது பிரிவின் கீழ் ரூ 500 அபராதம் விதித்துள்ளனர் ரயில்வே போலீசார்.












Click it and Unblock the Notifications