செரினா வில்லியம்ஸ் சரியான அல்பையா இருக்காப்ல!
லண்டன்: விம்பிள்டன் போட்டிகளில் விளையாடும்போது வீரர்களுக்கு வழங்கப்படும் துண்டுகளை செரினா வில்லியம்ஸ் தன்னுடன் எடுத்துச் சென்றுவிடுவாராம்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடப்பது அனைவரும் அறிந்தது. இந்த போட்டிகளில் பட்டம் பெற அனைத்து முன்னணி வீரர், வீராங்கனைகளும் தீவிரமாக முயற்சி செய்வர்.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் முன்னணி வீரர்கள் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினர்.
வீரர்களுக்கு துண்டு
விம்பிள்டன் போட்டிகளில் விளையாடுவோருக்கு ரூ.2,673.48 மதிப்புள்ள பல வர்ண துண்டு வழங்கப்படும். இந்த துண்டுகளை வீரர், வீராங்கனைகள் பயன்படுத்திவிட்டு திரும்ப கொடுத்துவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அவர்கள் விரும்பினால் அந்த துண்டை வைத்துக் கொள்ளலாம்.
வில்லியம்ஸ் சகோதரிகள்
வீனஸ் மற்றும் செரினா வில்லியம்ஸ் விம்பிள்டன் போட்டிகளில் விளையாட வரும்போதெல்லாம் இந்த துண்டுகளை தங்களால் முடிந்த அளவுக்கு எடுத்துச் சென்றுவிடுகிறார்கள் என்று கூறப்படுகிறது.
அல்பை செரினா
இந்த ஆண்டு போட்டியில் துவக்கத்திலேயே தோல்வி அடைந்த செரினா தன்னால் முடிந்த அளவுக்கு துண்டுகளை எடுத்துச் சென்றுவிட்டதாக இங்கிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஒரு போட்டியில் 8 துண்டு
செரினா ஒரு போட்டியில் விளையாடுகையில் 8 துண்டுகள் வரை எடுத்துச் செல்வதாக விம்பிள்டன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.