இளவரசன் எழுதிய கடிதம் உண்மைதான்.. தடயவியல் சோதனையில் உறுதி

Subscribe to Oneindia Tamil

Forensic experts Ilavarasan's last letter
தர்மபுரி: தர்மபுரி இளவரசன் எழுதி வைத்திருந்ததாக கூறப்பட்ட நான்கு பக்க கடிதம் அவர் எழுதியதுதான் என்பதை தடயவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இளவரசன் வைத்திருந்த பையில் சில கடிதங்களைப் போலீஸார் கைப்பற்றியிருந்தனர். அதில் தனது மனைவி திவ்யா, பெற்றோர், அண்ணனுக்கு கடிதம் எழுதியிருந்தார் இளவரசன்.

திவ்யாவுக்கு அவர் எழுதியிருந்தது மிகவும் உருக்கமாக இருந்தது. இந்தக் கடிதம் தொடர்பாக இளவரசனின் பெற்றோர் இளங்கோ-கிருஷ்ணவேணி, உறவினர்கள் ஜோசப், அறிவழகன், நத்தம் காலனியைச் சேர்ந்த ஊர் பெரியவர் சின்னத்தம்பி, இளவரசனின் அக்காள் திலகவதி,அவரது கணவர் சரவணன் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தினர்.

ஆனால் கடிதம் உண்மையில் இளவரசன் எழுதியதா என்பதில் சந்தேகம் இருப்பதாக இளவரசனின் தந்தை கூறியிருந்தார். இதையடுத்து தடயவியல் ஆய்வுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அந்தக் கையெழுத்தையும், ஏற்கனவே இளவரசன் நோட்டுப் புத்தகங்களில் எழுதியிருந்த கையெழுத்தையும் ஒப்பிட்டுப் பார்த்த நிபுணர்கள், இளவரசன் கடிதம் அவர் கைப்பட எழுதியதே என்பதை உறுதி செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+