ஆங்கிலத்தை படிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா
டெல்லி: குஜராத் மாநிலத்தைப் போல வளர்ச்சியை கண்டதுண்டா?குஜராத்தின் வளர்ச்சி மாடல்தான் இந்தியாவுக்கே ரோல் மாடல் என்று மார்தட்டுகிறது பாரதிய ஜனதா கட்சி.. ஆனால் உலகமே உள்ளங்கையில் சுருங்கிப் போய்விட்ட நிலையில் ஆங்கிலத்தால்தான் அழிவு என்கிறது பாரதிய ஜனதா கட்சிதான்.
குஜராத் மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் நீடித்து வருகிறது. இதனால் அந்த மாநிலம் பொருளாதார தன்னிறைவு பெற்றுவிட்டது.. தொழில்துறையினர் நாடி வருகிற மாநிலமாக உருவாகி இருக்கிறது என்று தம்பட்டம் அடிக்கிறது பாரதிய ஜனதா. இதனாலேயே அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராகவே முன்னிறுத்தவும் செய்கிறது அக்கட்சி.
இப்படி வளர்ச்சி, செயல்திட்டம் என்றெல்லாம் பேசிக் கொள்ளும் அதே கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் தான் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், 'ஆங்கில மொழி இந்தியாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. நாம் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நாட்டில் சமஸ்கிருதத்தில் பேசுபவர்கள் வெறும் 14 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர். ஆங்கிலத்தின் மூலம் நாம் அறிவைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் இளைஞர்களிடம் ஆங்கில கலாச்சார மோகம் ஊடுருவுவது ஆபத்தானது என்று கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications