நிரம்பின கர்நாடக அணைகள்- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு… விரைவில் 100 அடியை எட்டும்!

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணை அதன் முழு கொள்ளளவான 124 அடியை எட்டிவிட்டது. இதனால், அணைக்கு வரும் 46 ஆயிரம் கன அடி நீரும், அப்படியே காவிரியில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
அதேப்போல, கபினி அணை நிரம்பிவிட்டதால் பாதுகாப்புக் கருதி, அணைக்கு வரும் 33 ஆயிரம் கன அடி தண்ணீரும், காவிரியில் உபரி நீராக திறந்துவிடப்பட்டுள்ளது.
இவ்விரண்டு அணைகளிலும் திறந்தவிடப்பட்டுள்ள 79 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் கரைபுரண்டு வெள்ளமாக ஓடி, நாளை மாலை மேட்டூர் அணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே உபரி நீர் அதிகளவில் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வந்து கொண்டு இருந்தது. அது இன்று 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.75 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 3800 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அணைக்கு வெளியே தெரிந்த புராதண சின்னங்களான நந்தி சிலை கடந்த வாரம் மூழ்கியது. தற்போது இரட்டை கோபுரமும் மூழ்கிவிட்டது. கடல்போல காணப்படும் மேட்டூர் அணையைக் காண சுற்றுலா பயணிகள் வரத்தொடங்கியுள்ளனர். கடந்த 35 நாட்களில் அணையின் நீர்மட்டம் 65 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் 100 அடியை எட்டும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒகேனக்கல் அருவில் வெள்ளம்
காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆக்ரோசமாக அதிவேகமாக வந்து கொண்டு இருக்கிறது. தற்போது 79000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளநீரில் செடி, கொடிகள், சிறிய பாறைகள், கற்கள் இழுத்துவரப்படுகிறது. நீர்வீழ்ச்சிகளை மூழ்கடித்து கொண்டு தண்ணீர் கொட்டுகிறது.
மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் 2 அடி அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் யாரும் அருவிக்கு செல்லாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் காவிரியில் பொதுமக்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை திறப்பது எப்போது?
மேட்டூர் அணை நிரம்பிவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications