Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓடும் ரயிலில் நர்சிங் மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி: திருவனந்தபுரத்தில் ரயில்வே அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நர்சிங் மாணவியை ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற ரயில்வே அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை 3.45 மணியளவில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. ஒரு பெட்டியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் தனியாக பணம் செய்தார்.

அந்த ரயில் கோட்டயத்தை நெருங்கி கொண்டு இருந்தபோது, கொங்கன் ரயில்வேயில் அதிகாரியாக பணிபுரியும் ராஜன் என்பவர் அந்த பெட்டிக்கு வந்தார். தனியாக இருந்த மாணவியை சீண்டினார். பின்னர் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார்.

இதனால் அச்சமடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சல் போட்டார். அவரிடமிருந்து தப்பிக்க போராடினார். உடனடியாக தன்னிடமிருந்த செல்போன் மூலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த ரயில் கோட்டாயம் நிலையத்தை அடைந்த உடன் அங்கு தயாராக நின்ற போலீசார் ராஜனை கைது செய்தனர். அதன் பிறகு அவரை காசர்கோடு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் மீது ஏற்கனவே இதுபோல 2 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதனால் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+