Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தகயா குண்டுவெடிப்பு வழக்கு: வெளிநாட்டவர் உள்பட 5 பேரின் வரைபடங்கள் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவில் குண்டுவெடிப்பு வழக்கில் 5 குற்றவாளிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோவிலில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 10 குண்டுகள் வெடித்தன. இதில் 2 புத்த பிக்குகள் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரித்து வருகிறது. முன்னதாக 2 குற்றவாளிகளின் வரைபடங்கள் வெளியிடப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக வெளிநாட்டவர் உள்பட 5 பேரின் வரைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த வரைபடங்கள் ரிக்ஷாக்காரர்கள், ஆட்டோ டிரைவர்கள், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடம் அளிக்கப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்போரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Bodh Gaya blasts: National Investigation Agency releases sketches of five suspects
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+