இந்தியர்களை அதிக அளவில் கொல்லும் இதய நோய்: இதயம் பத்திரம்
டெல்லி: இந்தியாவில் அதிகாமானோர் இதய நோயால் தான் இறப்பதாக புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் இந்தியாவில் உள்ள 25 வயது முதல் 69 வயது வரை உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் இதய நோயால் இறப்பது தெரிய வந்துள்ளது.
அனைத்து வயதினரையும் சேர்த்தால் இறப்பவர்களில் 19 சதவீதம் பேர் இதய நோயால் தான் இறக்கினர்.
2 பேருக்குமே
இந்தியாவில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் அதிக அளவில் இதய நோயால் இறப்பது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில்
உலக அளவில் உள்ள இதய நோயாளிகளில் இந்தியாவில் தான் 60 சதவீதம் பேர் உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
20 மில்லியன்
வரும் 2015ம் ஆண்டிற்குள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களால் 20 மில்லியன் பேர் இறக்கக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பக்கவாதம்
2015ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் பேருக்கு பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.