சீனா: பீதியைக் கிளப்பும் ‘பறக்கும் தட்டுகள்’: ஆளில்லா ‘கேக் டெலிவரி’ விமானத்திற்குத் தடை
ஷாங்காய்: சீனாவில், ஆளில்லா விமானங்கள் மூலம் கேக் டெலிவரி செய்யும் விமானங்கள் சில சமயங்களில் அந்தரத்தில் கேக் பார்சலைத் தவற விட்டு, பொதுமக்களை அலற வைப்பதால் அவற்றிற்குத் தடை விதித்து அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் பேக்கரி நிறுவனம் ஒன்று தனது ஆன்லைன் புக்கிங் வாடிக்கையாளர்களுக்கு, ஆளில்லா விமானங்கள் மூலம் பேக்கரி ஐட்டங்களைச் சப்ளை செய்து வருகிறது.

மூன்றரை அடி விமானம்...
மூன்றரை அடி அகலம் கொண்ட இந்த ரக விமானங்களில் 2 தானியங்கி கேமராக்கள் பொருத்தப் பட்டிருக்கும்.

கில்லாடி விமானங்கள்...
முகவரியை டியூன் செய்து விட்டால் சரியாக விலாசம் தேடி டெலிவரி செய்வதில் இந்த விமானங்கள் கில்லாடிகளாம்.

தவறும் பார்சல்கள்...
ரிமோட் கண்ட்ரோல் முலம் இயங்கும் அத்தகைய விமானங்கள் சமயங்களில் அந்தரத்தில் பறக்கும் போது, பார்சலைத் தவற விட்டு விடுகின்றன. கடந்த வாரத்தில் கூட குவாங்பூ ஆற்றருகே ஒரு பார்சல் தவரி கீழே விழுந்தது.

சுற்றுலாப் பயணிகள் பீதி...
திடீரென கீழே விழுந்த கேக் துண்டங்களைக் கண்டு அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயந்து ஓடினர். அதனைத் தொடர்ந்து வீண் வதந்திகளும் ,பீதியும் பப்பகுதியில் பரவியது.

தடா...
அதன் எதிரொலியாக, தற்காலிகமாக ஆளில்லா விமானத்தின் மூலம் பேக்கரி ஐயிட்டங்களை டெலிவரி செய்யும் திட்டத்திற்கு தடா விதித்துள்ளது சீன அரசு.

9 ட்ரான்கள்...
தற்போது, 3 சிறிய ரக ஆளில்லா விமானங்கள் மற்றும் மோட்டார் ரக 6 ஹெலிகாப்டர்களை அந்த தனியார் பேக்கரி நிறுவனம் சொந்தமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications