கத்தி, கம்பிகளுடன் காரில் வந்த 8 பேர் மடக்கிப் பிடிப்பு
சென்னை: சென்னை அருகே காரில் இரும்புக் கம்பிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் யாரையாவது கொலை செய்வதற்காக வந்த கூலிப்படையினரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சுங்குவார்சத்திரம் பகுதியில் இவர்கள் பிடிபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த திங்கள்கிழமையன்று ரூ. 4 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை ஒரு கும்பல் வேனை மறித்துக் கொள்ளையடித்தது. இதையடுத்து இப்பகுதியில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகனக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
சுங்குவார்சத்திரம் பகுதியில், நடந்த சோதனையின்போது ஒரு காரை நிறுத்தி போலீஸார் ஆய்வு செய்தனர். காரில் 8 பேர் இருந்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசினர். இதனால் போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து காரை தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது காரில் கத்தியும், இரும்புக் கம்பிகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து காரில் இருந்த விஸ்வநாதன் (எ) விஸ்வா), சுரேஷ், ராஜ், நாகராஜ், வினோத்குமார், மனோஜ், பார்த்திபன், மதிவாணன் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த எட்டு பேரும் 22 முதல் 30 வரை உடையவர்கள் ஆவர்.