திகார் சிறையில் பவர்ஸ்டார்… ஜாமீன் கிடைப்பதில் சிக்கல்
வேலூர்: வேலூர் சிறை அதிகாரிகள், நன்னடத்தை சான்று வழங்காததால், நடிகர், சீனிவாசன், டெல்லி திகார் சிறையில் இருந்து, ஜாமினில் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்த, தொழில் ஓட்டல் அதிபர் ரங்கநாதனிடம், 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட நடிகர் சீனிவாசன், வாங்கிய கடனை கொடுக்காமல் ஏமாற்றியதால், கடந்த, ஏப்ரல், 26ம் தேதி, வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக, டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரிடம், ஐந்து கோடி ரூபாய் மோசடி செய்த நடிகர் சீனிவாசனை, டெல்லி போலீசார் கடந்த ஜூன், 4ம் தேதி, அழைத்துச் சென்றனர். பின்னர் அங்கு கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைத்தனர்.

6 வழக்குகளில் ஜாமீன்
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் பதிவு செய்யப்பட்ட, ஆறு வழக்குகளில் இருந்து, ஜாமினில் விடுவிக்க, பிணயத் தொகை செலுத்தி உள்ளனர். இந்த ஆவணங்கள், டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நன்னடத்தை சான்றிதழ்
டெல்லி வழக்கிலும், ஜாமின் பெற முயற்சி நடக்கிறது. வேலூர் சிறையில் இருந்த போது, அவருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்கினால் தான், திகார் சிறையில், ஜாமின் கிடைக்கும்.

அதிகாரிகள் மறுப்பு
இதனால், வேலூர் சிறையில், நன்னடத்தை சான்றிதழ் வாங்க முயற்சி நடந்தது; சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனால், திகார் சிறையில் இருந்து, பவர்ஸ்டார் சீனிவாசன் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

100 நாட்களை கடந்து
பவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது திகார் சிறை வாழ்க்கை 100 நாட்களை தாண்டிவிடுமா என்பது வேலூர் அதிகாரிகளின் கைகளில்தான் உள்ளது என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications