காவிரி படுகையில் இயற்கை எரிவாயு வயல்..ரிலையன்ஸ் குழுமம் கண்டுபிடித்தது!

ரிலையன்ஸ் குழுமத்துக்கு அண்மையில்தான் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான கூடுதல் பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மேலும் எரிவாயுவை மத்திய அரசு பெறுவதற்கான விலை முன்பு 4.20 டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவும் அண்மையில்தான் 8.4 டாலராக மத்திய அரசு உயர்த்தியிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் நலனுக்காகவே மட்டும் அதிகாரிகளின் கருத்துகளை மீறி பெட்ரோலியத் துறை அமைச்சரே தன்னிச்சையாக முடிவை மேற்கொண்டார் என்றும் புகார் கூறப்பட்டது.
மூத்த இடதுசாரித் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா தாக்கல் செய்திருந்த இந்த பொதுநலன் மனு மீதான விசாரணை செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமம் தற்போது திடீரென புதிய இயற்கை எரிவாயு வயலை கண்டுபிடித்திருப்பதாகவும் அதற்கு டி 56 என்று பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
இருப்பினும் தற்போது வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ரிலையன்ஸ் குழுமம் புதிய இயற்கை எரிவாயு வயல் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது பலத்த சந்தேகத்தை எழுப்புவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுநாள் வரை இந்திய எண்ணெய் துரப்பன நிறுவனமான ஓஎன்ஜிசியால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த இந்த இயற்கை எரிவாயு வயல், ரிலையன்ஸ் குழுமத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்ன மாயமோ என்ன மந்திரமோ?
அப்ப எதுக்கு இந்த ஓஎன்ஜிசி..?












Click it and Unblock the Notifications