விஜயகாந்த் மணிவிழா… திருப்பதியில் குடும்பதோடு தரிசனம்
திருப்பதி: மணிவிழா கொண்டாட உள்ள விஜயகாந்த் திருமலையில் வெங்கடேசப் பெருமாளை குடும்பத்தோடு சென்று தரிசனம் செய்துள்ளார்.
வருகிற 25-ந் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு 61-வது பிறந்தநாளாகும். இந்த பிறந்த நாளை மணி விழாவாக கொண்டாடுகிறார் விஜயகாந்த்.
அன்றைய தினம் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து ஏழைக்ளுக்கு உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏழுமலையான் தரிசனம்
பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர் சுதீஷ் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
வறுமை ஒழிப்பு தினம்
இந்த பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து ஏழைகளுக்கு உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.
ரூ 65 லட்சம் உதவி
நாளை சென்னை திரும்பும் விஜயகாந்த் ஞாயிறன்று தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 100 மாற்றுத் திறனாளிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள உதவி பொருட்களை விஜயகாந்த் வழங்குகிறார்.
காதுகேளாதோர் பள்ளிக்கு
எம்.ஜி.ஆர்.காது கேளாதோர் பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் உதவி வழங்குகிறார்.
கோர்ட் கோர்ட்டாக
கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பேசிய பேச்சுக்கள்தான் இந்த ஆண்டுவரை அவதூறு வழக்காக பாய்ந்து தமிழ்நாடு முழுவதும் கோர்ட் படியேறி வருகிறார் விஜயகாந்த் இந்த ஆண்டு ஆன்மீக சுற்றுலா கிளம்பிவிட்டார் விஜயகாந்த்.