உ.பா. திட்டம்.. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்: சோனியா மகிழ்ச்சி
டெல்லி: உணவு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய சோனியா, 2009 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மசோதா கொண்டுவரப்படும் என்று மக்களுக்கு உறுதி அளித்திருந்தோம். மக்களுக்கான உறுதிமொழியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதின் மூலம் நாட்டு மக்கள் நலனில் இந்திய அரசு எப்படியான அக்கறை கொண்டது என்பது வெளிப்படும். உணவுப் பாதுகாப்பு திட்டத்தால் உணவு தானியங்கள் வீணாவது தடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் எந்த ஒரு குழந்தையும் சத்துணவுக் குறைபாடுடன் இருக்காது என உறுதியளிக்கிறோம். நாடு முழுவதும் இருக்கும் தற்போதைய பொதுவிநியோகத்திட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
தற்போது நாம் விநியோகிக்கும் ஆதார் அட்டைதான் எதிர்காலத்தில் போலி ரேஷன் கார்டுகளை முடிவுக்குக் கொண்டுவரக் கூடியதாக இருக்கும். உணவு மானியம் கொடுப்பதில் ஏதேனும் முறைகேடுகள் நிகழுமேயானால் ஆதார் அட்டைகள் நிறுத்தப்படும்.
இந்த உணவு பாதுகாப்பு மசோதாவானது விவசாயிகள் மற்றும் வேளாண்துறையினரின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியது என்றார்.
சோனியா பேசிக் கொண்டிருந்த போது அவரை உரையை ராகுல் காந்தி மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications