நாடாளுமன்றத்தில் அமளியை உருவாக்கிய அயோத்தி யாத்திரை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் பாஜகவினர் அயோத்தி யாத்திரையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நேற்று தடையை மீறி யாத்திரை நடத்த முயன்றனர். ஆனால் உத்தரப்பிரதேச மாநில அரசோ யாத்திரைக்கு தடை விதித்து விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர்களை சிறையில் அடைத்தது.
இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும் இரு சபைகளிலும் பாரதிய ஜனதா கட்சியினர் யாத்திரைக்கு தடை விதித்து விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தை எழுப்பினர். இதற்கு பதிலடியாக சமாஜ்வாடி கட்சி எம்பிக்களும் குரல் எழுப்பினர்.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி ஆந்திர எம்.பி.க்கள் சிலரும் முழக்கமிட்டனர்.
இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் பிற்பகல் வரை பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications