90 வயது தாயை நாற்றமெடுத்த ஆட்டுக் கொட்டகையில் இத்த பாயில் வாட வைத்த மகள்
கொல்லம்: கேரளாவில் 90 வயது தாயை சேதமடைந்த ஆட்டுக் கொட்டகையில் தங்க வைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குளத்துபுழாவைச் சேர்ந்தவர் ரோசிலி(90). அவர் கடந்த சில ஆண்டுகளாக தனது மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். அவரது மகனும் அருகில் தான் வசிக்கிறார் என்றாலும் தாயை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து ரோசிலியை அவரது மகள் வீட்டுக்கு அருகே உள்ள பாழடைந்த ஆட்டுக் கொட்டகையில் தங்க வைத்தார். நாற்றமெடுத்த ஆட்டுக் கொட்டகையில் இத்துப் போன பாயில் ஒரு மூதாட்டி தன்னந்தனியாக கிடப்பதை அக்கம்பக்கத்தினர் தான் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இந்த செய்தி ஊடகங்களில் வந்த பிறகு என்ஜிஓ ஒன்று அந்த மூதாட்டியை கொட்டாரக்காராவில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்தது.












Click it and Unblock the Notifications