கூடலூரில் +1 மாணவியை கற்பழித்த டியூஷன் வாத்தியார் கைது
Subscribe to Oneindia Tamil

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர் ஆசிரியர் ரவிக்குமார் என்பவரிடம் டியூஷன் படித்து வந்தார். டியூஷனுக்கு சென்றபோது ரவிக்குமார் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். பின்னர் மாணவியை கற்பழித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
நடந்த சம்பவம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவிக்குமார் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டியூஷனுக்கு வந்த மாணவியை ஆசிரியர் கற்பழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications