படிக்காமல் சிறுவயதில் எருமைமாடு மேய்த்தேன்...: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா
ஷிமோகா: சிறுவயதில் படிக்காமல் மாடு மேய்த்த தன்னை மீண்டும் பள்ளியில் சேர்த்து சிறந்த மனிதனாக மாற்றியது தனது ஆசிரியர் தான் என ஆசிரியர் தின விழாவில் தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.
நேற்று, கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தனது சிறு வயது பள்ளி நாட்களையும், ஆசிரியர்களையும் நினைவு கூர்ந்தார்.
விழாவில் அவர் கூறியதாவது....

எருமை மேய்த்தேன்....
‘என்னுடைய சிறிய வயதில் ஒழுங்காக பள்ளிக்கூடம் சென்றதில்லை. குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 4ம் வகுப்பு வரை பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் எருமைகளை மேய்ப்பதற்காக சென்று விடுவேன்.

பேப்பர் சிகரெட்...
அப்போது பீடி, சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பீடி, சிகரெட் வாங்க காசு கிடைக்கவில்லை என்றால், பேப்பரை சிகரெட் போல் சுருட்டி புகைத்தேன்.

ராஜப்பா...
ஆனால் ராஜப்பா என்கிற ஆசிரியர் என்னையும், என்னுடன் இருந்த 3 பேரையும் அழைத்து வந்து நேரிடையாக 5,ம் வகுப்பில் சேர்த்து படிக்க செய்தார்.

சரியான பாதை....
பாதை தவறிய என்னை மறுபடியும் சரியான வழியில் கொண்டு வந்து, இந்த அளவிற்கு உயர்வதற்கு காரணமான ஆசிரியர் ராஜப்பாவை வணங்குகிறேன்' எனத் தெரிவித்தார் சித்தராமையா.












Click it and Unblock the Notifications