ஜின்னாஹ் ஷர்புதீன் எழுதிய.. பதினைந்தாவது காப்பியமான இயேசுகாவியம் நூல் வெளியீடு
அபுதாபி: காப்பியக்கோ ஜின்னா சர்புதீன் சமீபத்தில் எழுதிய இயேசு காவியம் நூல் துபாயில் வெளியிடப்பட்டது.
காப்பியக்கோ ஜின்னா சர்புதீன் சமீபத்தில் எழுதிய 'இயேசு காவியம்' நூல் துபையில், ஷேக் ஜையது ரோடு, ருஸ்தமானி டவரில் வெளியிடப்பட்டது. இயூமுலீக் மாநில கவுரவ ஆலோசகர் எம் ஜே அப்துல் ரவூப் முன்னிலையில், கவிஞர் பெருந்தகை வெள்ளம் ஜி எம் ஜே முஹம்மது இக்பாலிடம் முதல் பிரதியை அளித்து வெளியிடப்பட்டது.

பைபிள் அடிப்படையில் கவிஞர் கண்ணதாசன் இயேசு காவியம் எழுதி இருந்தார். காப்பியக்கோ ஜின்னா சர்புதீன் குர்ஆன், மற்றும் நபிகளாரின் திருமொழிகளை அடிப்படையாக வைத்து ஆக்கி உள்ளது படிக்க௯டிய அனைவருக்கும் சிறந்த கருத்துகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் படித்து சமயங்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள மிக்க உதவியாக இருக்கும் என பொறியாளர் இக்பால் ௯றினார். இந்த நிகழ்வில் ஜின்னா சர்புதீனின் மகனார் அர்ஷத் முஜீபு மற்றும் குடும்பத்தினரும் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications