குவாட்டரில் பாம்பு.. முதல் ரவுண்டில் ஒன்றும் தெரியல.. 2வது ரவுண்டில்.. அலறிய விவசாயி!
அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வாங்கிய குவார்ட்டர் பாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது. அந்த மதுவை குடித்த விவசாயி மயக்கம் அடைந்தார்.
Recommended Video
இது குறித்து அந்த நபர் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவது குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (36). இவர் திருமணம் செய்த சுத்தமல்லி கிராமத்தில் தனது மாமனார் வீட்டில் தங்கி நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

முதல் ரவுண்டு
விவசாயியான சுரேஷ் அடிக்கடி மது அருந்துவது உண்டு. நேற்று தமிழ் வருடப்பிறப்பு என்பதால் மது அருந்த எண்ணிய சுரேஷ் சுத்தமல்லி கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டில் வாங்கி பாதியை அருந்திவிட்டு மீதியை வைத்துள்ளார்

பாம்புக்குட்டி
முதல் சுற்று முடிந்தபின், மீதமுள்ள மதுவை அருந்துவதற்காக மது பாட்டிலை பார்த்தபோது மதுபாட்டிலில் குட்டி பாம்பு ஒன்று இருந்ததை கண்டு சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அரசு டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் கேட்டபோது முறையாக அவர்கள் பதில் கூறவில்லையாம்.

பதற்றம்
இந்நிலையில் பாம்பு இருந்த மதுவை அருந்தி விட்டோமே என அதிர்ச்சியில் சுரேஷ் வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த விஷயத்தை கூறினார். உடனடியாக அவர்கள் சுரேசை சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை
தற்போது ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுரேஷ் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருவது குடிமகன்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications