அபார்ட்மெண்ட்டில் நடந்த மெகா விருந்து... மொத்தமாக தூக்கிய கொரோனா... 103 பேருக்கு பாஸிட்டிவ்!
பெங்களூரு: பெங்களுருவில் பொம்மனஹல்லி பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 103 பேருக்கு கொரோனா தொற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி 4-ம் தேதி அந்த குடியிருப்பில் மெகா விருந்து நடந்துள்ளது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த விருந்துதான் கொரோனா அனைவருக்கும் பரவ முக்கிய காரணமாக இருந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனாலும் கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்நாடகாவில் ஓரளவு கொரோனா கட்டுக்குள் உள்ளது. ஆனால் தற்போது அங்கு ஒரே இடத்தில் மொத்தமாக பாதிப்பு ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படிக்கும் 40 மாணவிகளுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று கண்டறியப்பட்டப்பட்டது. சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பெங்களுருவில் பொம்மனஹல்லி பகுதியில் உள்ள எஸ்.என்.என் லேக் வியூ குடியிருப்பில் வசிக்கும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை அதிகரித்து உள்ளது. அந்த குடியிருப்பை சேர்ந்த சிலர் டேராடூனுக்கு பயணம் செய்வதற்கு முன்பு சோதனை செய்தபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
பிப்ரவரி 4-ம் தேதி அந்த குடியிருப்பில் மெகா விருந்து நடந்துள்ளது. இதில் அந்த குடியிருப்பில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்துதான் கொரோனா அனைவருக்கும் பரவ முக்கிய காரணமாக இருந்ததாக பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சின் ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் கூறுகையில், இந்த குடியிருப்பில் 1,052 பேரை சோதனை செய்துள்ளோம். அதில் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று உறுதியானவர்களில் 96 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அங்கு தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வைரஸின் மாறுபாட்டைக் கண்டறிய மாதிரியை சோதனைக்கு அனுப்பி உள்ளோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications